sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காட்சிபொருளான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது

/

காட்சிபொருளான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது

காட்சிபொருளான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது

காட்சிபொருளான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது


ADDED : மே 29, 2025 03:27 AM

Google News

ADDED : மே 29, 2025 03:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: பாலுார் அடுத்த சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் காட்சி பொருளாக இருந்து வரும் மேல்நிலைநீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்ருட்டி அடுத்த அண்ணாகிராம ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி சன்னியாசிப்பேட்டை. இந்த ஊராட்சியில் உள்ள காந்திநகரில் குடிநீர் தட்டுபாடு இருந்ததால் கடந்த 2021-2020 நிதி ஆண்டில் 15 வது நிதிக்குழு மான்ய நிதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலைநீர்தேக்க தொட்டி ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

இந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டிக்கு பம்ப் ரூம் இல்லாததால்,கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய பம்ப் ரூம் கட்டப்பட்டது. ஆனாலும் இதுவரை இந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டிக்கு மின்இணைப்பு வழங்கி,இந்த மோட்டாரை இயக்கிட ஒன்றிய அதிகாரிகள் முன்வராமல் உள்ளனர்.இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதியடைந்து வருகின்றனர்.

அண்ணாகிராம ஒன்றிய அதிகாரிகள் இந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவார்களா?






      Dinamalar
      Follow us