ADDED : அக் 16, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவிலில் அதிகபட்சமாக 24 மி.மீ., மழை பதிவானது.
கடலுார் மாவட்டத்தில் அவ்வப் போது பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல், நேற்று காலை 8:30 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ.,யில் பின்வருமாறு:
காட்டுமன்னார்கோவில் 24, அண்ணாமலை நகர் 21, பரங்கிப்பேட்டை 20. லால்பேட்டை 20, புவனகிரி 18, சிதம்பரம் 16, வடக்குத்து 13, கலெக்டர் அலுவலகம் 10, கடலுார் 8, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 8, குறிஞ்சிப்பாடி 8, பண்ருட்டி 7, சேத்தியாத்தோப்பு 6, ஸ்ரீமுஷ்ணம் 6, கொத்தவாச்சேரி 6, கீழ்ச்செருவாய் 6, வானமாதேவி 5, தொழுதுார் 5, விருத்தாசலம் 4, பெலாந்துறை 3 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 24 மி.மீ., மழை பதிவானது.