sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவரை கடப்பாரையால் குத்தி கொலை செய்த மனைவி கைது; நெய்வேலியில் பரபரப்பு 

/

கணவரை கடப்பாரையால் குத்தி கொலை செய்த மனைவி கைது; நெய்வேலியில் பரபரப்பு 

கணவரை கடப்பாரையால் குத்தி கொலை செய்த மனைவி கைது; நெய்வேலியில் பரபரப்பு 

கணவரை கடப்பாரையால் குத்தி கொலை செய்த மனைவி கைது; நெய்வேலியில் பரபரப்பு 


ADDED : ஜூலை 03, 2025 01:17 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலியில் சொத்து பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இரண்டாவது கணவரை கடப்பாரையால் குத்தி கொடூரமாக கொலை செய்த இரண்டாவது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பி-2. மாற்றுக்குடியிருப்பு 5 வது மெயின்ரோட்டில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன், 62; இவர் என்.எல்.சி., இன்கோசர்வ் சொசைட்டியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். முதல் மனைவிக்கு அருண்,23; என்ற மகன் இருக்கின்றார்.

மனைவி இறந்ததால், அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி,47; என்பவரை கொளஞ்சியப்பன் 2 வது திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு திருமணமாண ஒரு மகளும் கல்லுாரியில் பயிலும் ஒரு மகனும் உள்ளனர். பத்மாவதியும் ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்தவர்.

இந்நிலையில்,கொளஞ்சியப்பன் அதே பகுதியில் வசிக்கும் சசிகலா என்பவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தாக ,கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கொளஞ்சியப்பன் ,குடியிருக்கும் வீடு மற்றும் சொத்துகளை சசிகலாவுக்கு எழுதி தரப்போவதாக கூறியுள்ளார்.

இதில் ஆவேசமடைந்த பத்மாவதி, நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த கொளஞ்சியப்பன் தலையில் கடப்பாரையால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். பின்னர் செய்வதறியாமல் விடியும் வரை கணவரின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்த பத்மாவதி காலையில் தனது உறவினர்களுக்கு போன் செய்து கணவரை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பத்மாவதியை கைது செய்தனர். கொளஞ்சியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us