ADDED : ஏப் 28, 2025 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு:
மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடுவீரப்பட்டு அடுத்த சிலுவைபாளையத்தைச் சேர்ந்தவர் சகாயராஜ்,29; புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறார். இவரது மனைவி விஜயலட்சுமி,27; சகாயராஜ் கடந்த 21ம் தேதி நடுவீரப்பட்டு மந்தைவெயில் விஜயலட்சுமியை வீட்டிற்கு செல்லுமாறு கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
பின், சகாயராஜ் வீட்டிற்கு வந்த போது, மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சகாயராஜ் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.