ADDED : நவ 29, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.ஆதனுாரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் 65; கூலித்தொழிலாளி. இவர், வேலைக்கு செல்லாமல் இருந்ததை, கடந்த 24ம் தேதி மனைவி சாந்தி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கொளஞ்சிநாதன், வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார். இறந்த கொளஞ்சிநாதனுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கொளஞ்சிநாதன் மகன் சிவா கொடுத்த புகாரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.