ADDED : அக் 30, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்:  குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த அரசு உரைச் சேர்ந்த கூலி தொழிலாளி தங்கதுரை, 32;  குடிப்பழக்கம் உடையவர். இவர் வேலைக்கு செல்லாமல் கடன் வாங்கி மது குடித்து வந்துள்ளார்.
இதனால் மனைவி மணிமேகலை, கணவரை கண்டித்து வந்துள்ளார்.  இதனால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்ததால், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.
இதுகுறித்து  மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

