/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விழுப்புரம் - சென்னை பாசஞ்சர் ரயில்... நான்கு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
/
விழுப்புரம் - சென்னை பாசஞ்சர் ரயில்... நான்கு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
விழுப்புரம் - சென்னை பாசஞ்சர் ரயில்... நான்கு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
விழுப்புரம் - சென்னை பாசஞ்சர் ரயில்... நான்கு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 28, 2025 07:28 AM
ADDED : ஜூன் 28, 2025 04:04 AM

27.06.25, விருத்தாசலம், வேதா.ரமேஷ்குமார், 99444-00783, கீ , நேரம் மாலை 3.10விருத்தாசலம், ஜூன் 28-
விழுப்புரம்- தாம்பரம் பாசஞ்சர் ரயிலை விருத்தாசலத்தில் இருந்து புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நான்கு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி-சென்னை, கடலுார் - சேலம் ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு ஆகும்.
இவ்வழியாக பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், சரக்கு ரயில்கள் மற்றும் வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சஃபார் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் என தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. இதேப் போன்று, சேலம்-கடலுார் மார்க்கமாக செல்லும் ரயில்களும், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் வந்து, இன்ஜின் மாற்றம் செய்து புறப்படுகிறது.
இங்கிருந்து கடலுார், பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி என 4 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர். ஆனால், தலைநகரான சென்னைக்கு நேரடி ரயில் சேவை இல்லாமல், திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்களில் முண்டியடித்தபடி செல்லும் அவலம் நீடிக்கிறது.
பொதுவாக முன்பதிவு செய்யாமல், தினசரி ரயில் பாஸ் பெற்று செல்லும் பயணிகள் ரயிலின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள பொதுப்பயண பெட்டிகளில் நிற்க கூட முடியாத நிலையில், சென்னைக்கு மூன்று மணி நேரம் பயணிக்கும் அவலம் தொடர்கிறது. இதனால் பயணிகள் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கின்றனர்.
பாசஞ்சர் ரயில் நீட்டிக்கப்படுமா
இதை தவிர்க்கும் வகையில், விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலை 5:20 மணிக்கு புறப்படும், விழுப்புரம்-தாம்பரம் பாசஞ்சர் ரயிலை, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட செய்யலாம். அதன்படி, அதிகாலை 4:30 மணிக்கு, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் புறப்பட்டாலும், காலை 8:30 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடைய முடியும்.
இதனால் சென்னைக்கு கல்வி, மருத்துவம், வணிகம் மற்றும் அரசு, தனியார் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் சென்றடைய முடியும். இதனால் கல்வி, தொழில் ரீதியாக செல்வோர் தினசரி வந்து செல்ல ஏதுவாக அமையும்.
மேலும், பஸ்சில் கூடுதல் கட்டணத்தில், பல மணி நேரம் பயணம் செய்வது தவிர்க்கப்படும். தினசரி வந்து செல்வதால், சென்னை மாநகரில் ஏற்படும் இட நெருக்கடிக்கு எளிதில் தீர்வு காண முடியும். இதேப் போன்று, மாலை 6:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் பாசஞ்சர் ரயில், இரவு 9:30 மணிக்கு, விழுப்புரம் வந்தடைகிறது.
இந்த ரயிலை நீட்டிப்பதால், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு இரவு 10:00 முதல் 10:20 மணிக்குள் வந்தடைய முடியும்.
மாநகரில் நெரிசல் குறையும்
தலைநகர் சென்னைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து தங்குவதால், தினசரி போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. அதுபோல், குடிநீர் தட்டுப்பாடு, காற்று மாசுபாடு, உறைவிட வசதிகளை பெறுவது பெரும் சவாலாகிறது.
தற்போது, விருத்தாசலத்தில் இருந்து பாசஞ்சர் ரயிலை நீட்டிப்பதால் 1,000 முதல் 2,000 பேர் வரை தினசரி சென்று வருவார்கள். இதனால், சென்னை மாநகரில் நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
கூடுதல் ரயில்கள்
பண்ருட்டியில் உற்பத்தியாகும் பலா, முந்திரி பிரதான பயிர்களாக உள்ளன. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் பயனடைகின்றனர். அதுபோல், கடலுாரில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலம், ஈரோடு மார்க்கமாக கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.
இதனால், சேலம், ஈரோடு, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு மாவட்ட மக்கள் எளிதில் சென்று வருவதுடன், வணிக ரீதியாகவும் பயனடைய முடியும். ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் மற்றும் சரக்கு வர்த்தகம் அதிகரிக்கும்.
எனவே, விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும் வகையில், விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை நீட்டிப்பு செய்ய தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத் கூறுகையில், 'விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை நீட்டிக்க ஏற்கனவே ரயில்வே அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. வரும் கூட்டத்திலும் பேசி பாசஞ்சர் ரயிலை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.