ADDED : நவ 13, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி அடுத்த கூடலுார் ஊராட்சியில் சேவை மைய கட்டடம் அருகே, பொது மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், ரூ.6 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது.
ஆனால், குடிநீர் மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இதுநாள் வரை பாழடைந்து வருகிறது. எனவே, மக்கள் நலன்கருதி, காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் வழங்கும் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

