sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

/

 ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

 ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

 ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?


ADDED : நவ 23, 2025 06:28 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.

கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வடக்குவெள்ளுர் கீழ்பாதி, மேல்பாதி, பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினசரி 300 க்கும் மேற்பட்டோர் காலை முதல் மாலை வரை சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி இங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெய்வேலி நுகர்வோர் உரிமை சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் உடல் நலன் பாதிப்பு, விபத்து, மாரடைப்பு, உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு அருகில் உள்ள விருத்தாசலம், கடலுார் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில், கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்கும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us