ADDED : மே 29, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பெலாந்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அலமேலு, 47, என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, அலமேலுவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.