ADDED : நவ 26, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகர் குழந்தை காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவர், நேற்று முன்தினம் காலை மனைவி வளர்மதியுடன், 50, பச்சை யாங்குப்பம் சர்ச்சுக்கு பைக்கில் சென்றனர்.
மணவெளி ரயில்வே கேட் அருகே சென்றபோது, பின்னால் வந்த டிராக்டர் மோதியது.
இதில், செல்வராஜ் மற்றும் அவரது மனைவி வளர்மதி காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வளர்மதி உயிரிழந்தார்.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.