ADDED : ஏப் 27, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அருகே வீட்டில் தண்ணீர் குடிக்க சென்ற போது மயங்கி விழுந்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி மனைவி சங்கீதா,38; இவர் கடந்த 17ம் தேதி இரவு தனது வீட்டிற்குள் தண்ணீர் குடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார்.
தலையில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கலைமணி கொடுத்த புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.