ADDED : டிச 06, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : வெள்ளத்தில் மூழ்கிய பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார். .
தென் பெண்ணையாற்றில் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, திருக்கண்டேஸ்வரம் தோப்புத் தெருவில் 4 அடி உயரத்திற்கு புகுந்தது.
அதனை அறியாமல், அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சாந்தி, 50; வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.