ADDED : ஆக 29, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது
குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி காலனியை சேர்ந்தவர் கம்சலா, 50. மாற்றுத்திறனாளியான இவர் திருமணம் செய்யாமல் சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். இவர் கடந்த ஜூலை மாதம், 1ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் இவரை தேடியும் தகவல் கிடைக்கவில்லை.
சகோதரர் சிவலிங்கம் புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.