ADDED : மார் 14, 2024 11:32 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா நடந்தது.
பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா விழாவை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோருக்கு பரிசு வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சுசித்ரா செய்திருந்தனர்.
