sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகளிர் உரிமைத்துறை சிறப்பு கருத்தரங்கம்

/

மகளிர் உரிமைத்துறை சிறப்பு கருத்தரங்கம்

மகளிர் உரிமைத்துறை சிறப்பு கருத்தரங்கம்

மகளிர் உரிமைத்துறை சிறப்பு கருத்தரங்கம்


ADDED : அக் 19, 2024 04:49 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர் நலனுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

கூட்டத்திற்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தாங்கினார். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் கே.எஸ்., டெவலப் மென்ட் டிரஸ்ட் இணைந்து நடத்திய சணல் பை உற்பத்தி பயிற்சி வகுப்பினை நிறைவு செய்த 20 நபர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

பின் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் மகளிர் நல வாரியம் மூலம் கடலுார் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளில் முன்னுரிமை பெறுவதற்கு கைம்பெண்கள் நலவாரியத்தில் உறுப்பினராக வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து விதவை மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய இணையதளத்தில் 895 விதவைகள், 152 ஆதரவற்ற விதவைகள் மற்றும் 31 பேரிளம் பெண்கள் என மொத்தம் 1078 பெண்கள் உறுப்பின ராகியுள்ளனர்.

இந்த கருத்தரங்கில் பெண்களுக்கான இலவச சட்ட உதவிகள், குடும்ப வன்முறைகளிலிருந்து உரிய பாதுகாப்பு, சொத்துரிமை மற்றும் பெண்களுக்கான சட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் என அனைத்து திட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கப்படுகிறது என்றார்.

கருத்தரங்கில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் சித்தார்தர், சேது. முருகபூபதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ரவி, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சுந்தர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தனபாக்கியம், மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us