sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் ரூ.22.15 கோடியில் புதிய மேம்பாலப் பணி தீவிரம்

/

கடலுாரில் ரூ.22.15 கோடியில் புதிய மேம்பாலப் பணி தீவிரம்

கடலுாரில் ரூ.22.15 கோடியில் புதிய மேம்பாலப் பணி தீவிரம்

கடலுாரில் ரூ.22.15 கோடியில் புதிய மேம்பாலப் பணி தீவிரம்


ADDED : ஜன 24, 2025 11:12 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கெடிலம் ஆற்றில் ரூ. 22.15 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலுார் கெடிலம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, இரும்பு பாலம் மூலம் புதுச்சேரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து இருந்து வந்தது.

நுாறு ஆண்டுகள் பழமையான இந்த பாலம் சேதமடைந்ததால், இதன் அருகில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு, வாகன போக்குவரத்து சென்று வருகிறது.

இந்நிலையில், இரும்பு பாலத்தை இடித்துவிட்டு, 22.15 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது பைல் பவுண்டேஷன் அமைத்து, துாண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us