sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது

/

சிறுவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது

சிறுவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது

சிறுவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது


ADDED : நவ 25, 2024 04:55 AM

Google News

ADDED : நவ 25, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கலியமலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல், 48; கூலித்தொழிலாளி. இவரது மகன் ஹரிகரன், 15. பக்கத்து வீட்டைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஸ்டாலின், 15. இருவரும் கொள்ளுமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.

நேற்று முன்தினம் ராஜவேல் மது அருந்தி போதையில் வீட்டில் படுத்து துாங்கினார். அப்போது, வீட்டு வாசலில் ஹரிகரனும், ஸ்டாலினும் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டு சத்தம் போட்டுள்ளனர்.

துாங்க இடையூறாக இருந்ததால், ராஜவேல் அவர்களை கண்டித்தார். தொடர்ந்து, சத்தம் போட்டபடி வீடியோ கேம் விளையாடியதால் ஆத்திரமடைந்த ராஜவேல், பைக்கிற்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை சிறுவர்கள் மீது ஊற்றி தீ வைத்தார். ஹரிகரன் தப்பியோடினார். அருகில் உட்கார்ந்திருந்த ஸ்டாலின் மீது பெட்ரோல் பட்டு தீப்பிடித்துக்கொண்டது. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர்.

ஸ்டாலின் உடல் முழுதும் தீக்காயம் ஏற்பட்டு, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்டாலின் தந்தை சக்திவேல் புகாரில் புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜவேலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us