/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணுக்கு மிரட்டல் தொழிலாளி கைது
/
பெண்ணுக்கு மிரட்டல் தொழிலாளி கைது
ADDED : பிப் 01, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த உச்சிமேடு காலனியைச் சேர்ந்த சரவணன் மனைவி சங்கவி, 19; கட்டட தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் கடலுாரில் கட்டட வேலை செய்தார். அப்போது, உடன் வேலை செய்த அதே ஊரை சேர்ந்த தமிழரசன், 28; மீது, சிமெண்ட் கலவையை தவறுதலாக கொட்டியதாக தெரிகிறது. இதனால் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தமிழரசன் குடிபோதையில், சங்கவி வீட்டிற்கு சென்று திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சங்கவி கொடுத்த புகாரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து தமிழரசனை கைது செய்தனர்.

