ADDED : அக் 31, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே வயிற்று வலியால் அவதியடைந்த கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுார் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ராசு, 55; கூலித் தொழிலாளி.
இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
கடந்த 26ம் தேதி மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடன், சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று முன்தினம் இ றந்தார்.
புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

