ADDED : செப் 27, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி தனியார் கல்லுாரி பஸ் மோதி இறந்தார்.
புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிங்காரம், 55; கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை ஆலப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே, கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயன்ற போது, பின்னால் வந்த, தனியார் கல்லுாரி பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த சிங்காரம் சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.