ADDED : நவ 24, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த சிவபுரி கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்,58; கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார். மாரியப்பா நகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.