sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி சாவில் மர்மம்; கிராம மக்கள் சாலை மறியல்

/

தொழிலாளி சாவில் மர்மம்; கிராம மக்கள் சாலை மறியல்

தொழிலாளி சாவில் மர்மம்; கிராம மக்கள் சாலை மறியல்

தொழிலாளி சாவில் மர்மம்; கிராம மக்கள் சாலை மறியல்


ADDED : மே 05, 2025 06:15 AM

Google News

ADDED : மே 05, 2025 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு; சென்னையில் இறந்த சேத்தியாத்தோப்பு தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்,33; இவரது மனைவி சபீனா. மூன்றரை வயதில் ஆண் குழந்தை, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

அரிகிருஷ்ணன் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வீடுகளுக்கு கூரை சிமெண்ட் ஷீட் போடும் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது மொபைல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. சந்தேகமடைந்த அவரது பெற்றோர், அரிகிருஷ்ணன் வேலை செய்த நிறுவனத்தில் நேற்று காலை தொடர்பு கொண்டு கேட்ட போது, சரியாக பதில் கூறவில்லை. மீண்டும் கேட்ட போது, 40 அடி உயரத்தில் ஷீட் போடும் போது, கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் அரிகிருஷ்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியும் மாலை 4:00 மணிக்கு கீழ்வளையமாதேவி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் செய்தனர். சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி 4:30 மணிக்கு கலைந்து போக செய்தனர். மறியல் காரணமாக பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us