ADDED : மார் 31, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இந்திய பொறியாளர் நிறுவன மாணவர் அமைப்பு சார்பில் பொறியாளர் தினம் மற்றும் உலக தண்ணீர் தின விழா நடந்தது.
பொறியியல் புல முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கட்டமைப்பியல் துறை பேராசிரியர் திருஞானசம்பந்தம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சென்னை பன்னாட்டுபொறியாளர் திவாகர் பங்கேற்று பேசினார்.
கட்டடப் பொறியியல் துறை பேராசிரியர் முருகப்பன், கலைப்புல முதல்வர் விஜயராணி, அறிவியல் புல முதல்வர் ஸ்ரீராம் வாழ்த்திப் பேசினர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டp. பேராசிரியர்கள் புனிதா, மீனா, அபர்ணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பேராசிரியர் நளினி நன்றி கூறினார்.