/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் யோகா தின விழா
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் யோகா தின விழா
ADDED : ஜூன் 22, 2025 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் கீதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் சீனிவாசன், பேசினார்.
கிருஷ்ணசாமி கல்விக்குழுமத்தின் செயலாளர் விஜயகுமார், கல்லுாரி முதல்வர் நிர்மலா, கல்லுாரி நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன் வாழ்த்திப் பேசினர். யோகாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.