ADDED : பிப் 19, 2026 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மின்சாரம் தாக்கி இறந்த வாலிபரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
விருத்தாசலம், ஆலடி சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாலசுப்ரமணியன், 28. கோழி இறைச்சிக்கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல கடைக்கு சென்று, இறைச்சியை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு முன்னதாக, தலைமை மருத்துவர் சாமிநாதன் முன்னிலையில் பாலசுப்ரமணியன் கண்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப் பட்டன.
மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாலசுப்ரமணியன் உறவினர்களிடம் சான்றிதழ் வழங்கி, நன்றி தெரிவிக்கப்பட்டது.

