ADDED : மே 15, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: வீட்டில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த கூடலுார் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல்,39; இவர் கடந்த 13ம் தேதி, இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12:00 மணிக்கு அவரது வீட்டில் 4 மர்ம நபர்கள், திருட வந்தனர்.
அதில், ஒருவர் திட்டக்குடியில் பதுங்கியிருப்பதாக சக்திவேலுக்கு நேற்று மதியம் 1:00 மணிக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அவர் கிராம மக்களுடன் சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து ஆவினங்குடி போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார்.
விசாரணையில், ஆவினங்குடி, மாரியம்மன் கோவில் தெரு ராஜேந்திரன் மகன் அழகுதுரை, 23; என்பதும் திருட வந்ததையும் ஒப்புக்கொண்டார்.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.