sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மான் வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டு துப்பாக்கி, இறைச்சி பறிமுதல்

/

மான் வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டு துப்பாக்கி, இறைச்சி பறிமுதல்

மான் வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டு துப்பாக்கி, இறைச்சி பறிமுதல்

மான் வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டு துப்பாக்கி, இறைச்சி பறிமுதல்


ADDED : மே 22, 2025 03:52 AM

Google News

ADDED : மே 22, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மானை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் மானை வேட்டையாடி, 3 பேர் சேர்ந்து இறைச்சி விற்பதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் சென்று பார்த்தபோது மான் இறைச்சி விற்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் சிக்கினார். இருவர் தப்பிச்சென்றனர்.

விசாரணையில், விருத்தாசலம், பெரியார் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 32, என்பதும், இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் பெண்ணாடம் நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் கண்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே மனைவியுடன் வசிப்பது தெரிந்தது. இவர் நேற்று முன்தினம் இரவு வேப்பூர், கண்டப்பங்குறிச்சி காப்புக்காட்டில் மானை வேட்டையாடி நேற்று காலை 6.30 மணியளவில் பெண்ணாடம் நரிக்குறவர் குடியிருப்பில் மானை அறுத்து இறைச்சி விற்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் அளித்த தகவலின்பேரில், விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன், வனவர் சஞ்சீவி, சிவகுமார், வனக்காப்பாளர் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் வழக்கு பதிந்து, சுரேஷை கைது செய்தனர். 15 கிலோ மான் இறைச்சி, நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us