ADDED : ஏப் 07, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கம்பர் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் ருத்ரா, 28, என்பவர் தனது வீட்டில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ருத்ராவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

