ADDED : அக் 08, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேமம் கிராமம் வழியாக பதிவெண் இல்லாத பைக்கில் மணல் மூட்டைகள் கடத்தி வந்தவரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், நேமம் கிழக்கு தெரு ராசுகுட்டி, 31; என்பது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, பைக், மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.