sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூடுதல் விலைக்கு மது விற்பதை கண்டித்து வடலுாரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

/

கூடுதல் விலைக்கு மது விற்பதை கண்டித்து வடலுாரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கூடுதல் விலைக்கு மது விற்பதை கண்டித்து வடலுாரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கூடுதல் விலைக்கு மது விற்பதை கண்டித்து வடலுாரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி


ADDED : ஏப் 15, 2025 07:34 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலூர் : வடலுாரில், மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பதை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

வடலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் ஒருவர் புகார் ஒன்றை அளிக்க சென்றார். போலீசார் அவரிடம் புகாரை பெற்ற போது, அதில் மதுபாட்டில், 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்படுவதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டியும் புகாரில் தெரிவித்திருந்தார்.

அவர், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, அசோக்குமார், 37, என்றும், எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் என தெரிவித்துள்ளார். அவரது புகாரை வாங்க மறுத்த வடலூர் போலீசார், திருப்பி அனுப்ப முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ் ஸ்டேஷன் முன்பு, தான் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமரசம் செய்து அனுப்பினர்.

போலீஸ் ஸ்டேஷன் முன்பு நபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us