ADDED : ஆக 11, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திய பைக்கை காணவில்லை என, வாலிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் மகன் சதீஷ்குமார், 30; இவர் கடந்த 4ம் தேதி, கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டு அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, பைக்கை காணாதது கண்டு அதிர்ச்சியடைந் தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.