ADDED : மே 18, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மின்சாரம் தாக்கி, வட மாநில வாலிபர் இறந்தார்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் கார்த்தி டோலாய்,32; ரெட்டிச்சாவடி அடுத்த சந்திக்குப்பத்தில் எலக்ட்ரிக் கடையில் தங்கி மேடை, பூ அலங்காரம் வேலை செய்து வந்தார்.
கடந்த 15ம் தேதி, தங்கியிருந்த இடத்தில் இரும்பு ஏணியில் ஏறி பல்பு மாட்டிய போது மின்சாரம் தாக்கி இறந்தார். புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.