sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் மர்ம சாவு: உறவினர்கள் மறியல் கல்வீச்சில் எஸ்.ஐ., மண்டை உடைப்பு

/

வாலிபர் மர்ம சாவு: உறவினர்கள் மறியல் கல்வீச்சில் எஸ்.ஐ., மண்டை உடைப்பு

வாலிபர் மர்ம சாவு: உறவினர்கள் மறியல் கல்வீச்சில் எஸ்.ஐ., மண்டை உடைப்பு

வாலிபர் மர்ம சாவு: உறவினர்கள் மறியல் கல்வீச்சில் எஸ்.ஐ., மண்டை உடைப்பு


ADDED : பிப் 14, 2024 03:55 AM

Google News

ADDED : பிப் 14, 2024 03:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி அருகே வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கல்வீச்சில் சப் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

திட்டக்குடி அடுத்த கூடலுார் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் அன்புராஜ்,19; இவர், நேற்று முன்தினம் உறவினர் வீட்டு துக்க காரியத்திற்காக பெண்ணாடம் சென்றவர், நேற்று அதிகாலை 2:00 மணியளவில், பெண்ணாடம் அம்பேத்கர் நகரில் தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பெண்ணாடம் போலீசார், அன்புராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அன்புராஜ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை சொந்த ஊரான கூடலுாருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, அன்புராஜ் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மாலை 4:50 மணிக்கு விருத்தாசலம்- திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி.,க்கள் விருத்தாசலம் ஆரோக்கியராஜ், திட்டக்குடி மோகன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாத நிலையில், அன்புராஜ் உடலுடன் மறியலை தொடர்ந்தனர். அதனையொட்டி அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். உடன் மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். அதில், ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் ரவியின் மண்டை உடைந்தது. போலீஸ் வாகனம் சேதமடைந்தது.

நிலமை மோசமானதை தொடர்ந்து போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். எஸ்.பி., ராஜாராம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தார்.






      Dinamalar
      Follow us