நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காலனி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் சுரேந்தர், 21; இவர், கடந்த 12ம் தேதி தனது தாய் குணலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க மருத்ததால் விரக்தியடைந்த சுரேந்தர் வீட்டில் இருந்த பூச்சிமருந்து குடித்தார். உடனடியாக அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுதாகர் நேற்று இறந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.