sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பஸ்களில் அரூர் பயணிகளைஏற்றி செல்ல மறுப்பதாக புகார்

/

அரசு பஸ்களில் அரூர் பயணிகளைஏற்றி செல்ல மறுப்பதாக புகார்

அரசு பஸ்களில் அரூர் பயணிகளைஏற்றி செல்ல மறுப்பதாக புகார்

அரசு பஸ்களில் அரூர் பயணிகளைஏற்றி செல்ல மறுப்பதாக புகார்


ADDED : பிப் 21, 2025 12:46 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பஸ்களில் அரூர் பயணிகளைஏற்றி செல்ல மறுப்பதாக புகார்

அரூர்: சேலத்தில் இருந்து, அரூர் வழியாக, இயக்கப்படும் அரசு பஸ்களில், தங்களை ஏற்றுவதற்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மறுப்பதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: சேலத்தில் இருந்து, அரூர் வழியாக, வேலுார், சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேரத்தில், அரூர் வழியாக, செல்லும் அரசு பஸ்களில், அரூர் செல்லும் பயணிகளை ஏற்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மறுப்பு தெரிவிக்கின்றனர். காலியான இருக்கைகளுடன் பஸ்கள் சென்றாலும் கூட, அரூர் பயணிகளை ஏற்றுவதில்லை. மேலும், அரூர் பஸ் ஸ்டாண்ட் வராமல், பைபாஸ் சாலை வழியாக பஸ்கள் சென்று விடுகின்றன. இதனால், இரவில் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர், மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சேலத்தில் இருந்து அரூர் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்களில், அரூர் பயணிகளை ஏற்றிச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us