/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 06, 2024 02:17 AM
தர்மபுரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஜானகிராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், வருவாய் கிராம ஊழியர்களுக்கு இணையான மாதந்திர சிறப்பு ஓய்வூதியம், 6,750 ரூபாய் அகவிலை படியுடன் வழங்க வேண்டும். சத்துணவு ஓய்வூதியர்களுக்கு ஈமச்சடங்கு நிதியாக, 25,000 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.