sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

/

காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு


ADDED : பிப் 21, 2025 12:47 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையிலுள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று, தேய்பிறை அஷ்டமியையொட்டி, வாசனை திரவியங்களால் அபிஷேகமும், தொடர்ந்து, மஹா தீபாராதனையும் காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள் பாலித்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற தேங்காய், சாம்பல் பூசணி, எலுமிச்சையில் தீபமேற்றி வழிபட்டனர்.

* கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தங்கக்கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள் பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் அகலில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டை தட்சிண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us