/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கமொரப்பூர் பயணிகள் கோரிக்கை
/
சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கமொரப்பூர் பயணிகள் கோரிக்கை
சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கமொரப்பூர் பயணிகள் கோரிக்கை
சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கமொரப்பூர் பயணிகள் கோரிக்கை
ADDED : பிப் 23, 2025 01:56 AM
சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கமொரப்பூர் பயணிகள் கோரிக்கை
மொரப்பூர்: மொரப்பூர் ரயில் பயணிகள் சங்கம், அனைத்து வணிகர்கள் சங்கம் மற்றும் உதவும் கரங்கள் குழு சார்பில், ரயில் பயணிகள் சங்க தலைவர் சென்னகிருஷ்ணன், பொதுச்
செயலாளர் ரகுநாதன் உள்ளிட்டோர், சேலம் கோட்டம் ரயில்வே உதவி மேலாளர் சிவலிங்கத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் கடந்த, 1861ல் ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது. 164 ஆண்டு பழமையான, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன், தென்னக ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வருகிறது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள் என தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் இந்த ரயில்வே ஸ்டேஷன் வழியாக, பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். சேலம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் அமைந்துள்ள மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் நலன் கருதி மங்களூரு - சென்னை, சந்திரகாரா - மதுரை - சந்திரகாரா ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தாசரஹள்ளி அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில், மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மொரப்பூரில் இருந்து இரவு, 11:30 மணிக்கு சென்னைக்கு ரயில் உள்ளது. அதன்பின், காலை, 9:40 மணிக்குத்தான் சென்னைக்கு ரயில் வசதி உள்ளது. இடைப்பட்ட, 10 மணி நேரத்திற்கு சென்னைக்கு ரயில் இல்லை. எனவே, கூடுதலாக சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டும். நீட்டிக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

