sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலைகளில் காய வைக்கப்படும் தானியத்தால் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலைகளில் காய வைக்கப்படும் தானியத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலைகளில் காய வைக்கப்படும் தானியத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலைகளில் காய வைக்கப்படும் தானியத்தால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மார் 26, 2025 02:06 AM

Google News

ADDED : மார் 26, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலைகளில் காய வைக்கப்படும்

தானியத்தால் வாகன ஓட்டிகள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி:--

பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் துவரை சாகுபடி நடக்கிறது. தற்போது அறுவடை துவங்கி உள்ளது. இதை தார்ச்சாலைகளில் வெயிலில் காய வைக்கின்றனர்.

பின் அதை அடிப்பதற்காக சாலையிலே விட்டு விடுகின்றனர். அதன் மீது வாகனங்கள் சென்றால், துவரை தனியாக விழுந்து விடும். இதனால் பெரும்பாலும் விவசாயிகள் சாலையை தானிய பயிர்கள் அடிக்கும் களமாக பயன்படுத்தி வருகின்றனர். கடத்துார்,-- புட்டிரெட்டிப்பட்டி சாலை, குருபரஹள்ளி-- அரூர் சாலை, பொம்மிடி - -அரூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள், துவரை செடியை சாலையில் பரப்பி காய வைக்கின்றனர்.

இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கார், உள்ளிட்ட கனரக வாகனங்களில் செல்வோர், துவரை செடிகள் மீது செல்லும் போது, வாகனத்தின் அடியில் துவரை சிக்கி, தீ பிடிக்கும் அபாயம் உள்ளது. நேற்று மதியம் குருபரஹள்ளி பகுதியில் பரப்பி காய வைத்த துவரை செடிகளால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமமேற்பட்டது. எனவே, சாலையில் தானியங்கள் காயவைப்பதை தடுக்க, வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us