sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மரவள்ளி சாகுபடி: தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் விவசாயிகள்

/

மரவள்ளி சாகுபடி: தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் விவசாயிகள்

மரவள்ளி சாகுபடி: தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் விவசாயிகள்

மரவள்ளி சாகுபடி: தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் விவசாயிகள்


ADDED : ஏப் 10, 2025 01:51 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரவள்ளி சாகுபடி: தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் விவசாயிகள்

பாப்பிரெட்டிப்பட்டி:--கடும் வறட்சி நிலவுவதால், தோட்டங்களில் நட்டுள்ள மரவள்ளி கிழங்கு குச்சிகளுக்கு, விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், 3,705 ஏக்கர் பரப்பளவிலும், கடத்துார், மொரப்பூர் வட்டாரத்தில், 8,645 ஏக்கரிலும் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு குச்சி நடவு செய்துள்ளனர்.

மேட்டு பயிராகவும், கிணற்று பாசனம் மூலமாகவும் சாகுபடி செய்து வருகின்றனர். டிசம்பர் மாதங்களில் நடவு பணிகள் தொடங்கி, ஓராண்டு முடிந்து அறுவடை செய்வர். தற்போது கிணறுகள் வறண்டதால், டிசம்பரில் நடவு செய்த மரவள்ளிக்கிழங்கு குச்சிகள் கோடை வெயிலின் தாக்கத்தால் கருகும் நிலைக்கு சென்றுள்ளது. ஏப்., மே மாதங்களில் அடிக்கும் வெயிலில் கிழங்கு குச்சிகளை காப்பாற்றி விட்டால், பிறகு ஜூன் மாதங்களில் மழை பெய்தால் கிழங்கு குச்சிகள் வளர்ந்து விடும். தற்போது அடிக்கும் வெயிலில் இருந்து, கிழங்கு குச்சிகளை காப்பாற்ற, பொம்மிடி, வேப்பிலை பட்டி, தாளநத்தம், தென்கரைகோட்டை, குருபஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் கிழங்கு குச்சிகளுக்கு, தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர்.

இதுகுறித்து கேத்துரெட்டிப்பட்டி காளிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி மணிவேல் கூறியதாவது: கடத்துார் வட்டாரத்தில் மட்டும், 4,000 ஏக்கருக்கு மேல் மரவள்ளிக்கிழங்கு குச்சிகளை விவசாயிகள் நட்டுள்ளனர். நான், 3 ஏக்கரில் நட்டுள்ளேன். எங்கள் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடப்பட்ட குச்சிகள், கிணற்றில் நீரின்றி, சில குச்சிகள் பட்டு போவதும், கருகி போவதுமாக உள்ளது.

இதனால் வாரத்தில், 2 நாட்கள், 1,500 ரூபாய்க்கு ஒரு டிராக்டர் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி, குச்சியை காப்பாற்றி வருகிறேன். என்னை போன்றே வேப்பிலைபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளும், நீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us