/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர்வரத்து அருவிகளில் குளிக்க தடையால் ஏமாற்றம்
/
ஒகேனக்கல் காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர்வரத்து அருவிகளில் குளிக்க தடையால் ஏமாற்றம்
ஒகேனக்கல் காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர்வரத்து அருவிகளில் குளிக்க தடையால் ஏமாற்றம்
ஒகேனக்கல் காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர்வரத்து அருவிகளில் குளிக்க தடையால் ஏமாற்றம்
ADDED : செப் 02, 2024 03:26 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில், 25,000 ஆயிரம் கன அடி நீர்வரத்தால், காவிரி-யாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்-துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவி-ரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பிய நிலையில், தமி-ழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 5,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 16,523 கன அடி என, 21,523 கன அடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் தமிழக எல்லையான
பிலிகுண்டுலுவில் நேற்று மாலை, 6:00 மணிக்கு, 25,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது.இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரிப்பால் அரு-விகள், காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல்
இயக்கவும், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நேற்று தடை விதித்தது. இதனால் விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம-டைந்தனர். ஒரு சிலர் தடையை மீறி, ஆற்றங்கரையோரத்தில் குளித்து
சென்றனர்.