/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
/
பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜன 25, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
நல்லம்பள்ளி, : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து, வட்டார அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள, 32 பஞ்., களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், பி.டி.ஓ.,க்கள், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.