sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு கல்லுாரி மாணவர்களுக்குஅடிப்படை வசதிக்கு நா.த.க., மனு

/

அரசு கல்லுாரி மாணவர்களுக்குஅடிப்படை வசதிக்கு நா.த.க., மனு

அரசு கல்லுாரி மாணவர்களுக்குஅடிப்படை வசதிக்கு நா.த.க., மனு

அரசு கல்லுாரி மாணவர்களுக்குஅடிப்படை வசதிக்கு நா.த.க., மனு


ADDED : ஏப் 04, 2025 01:08 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு கல்லுாரி மாணவர்களுக்குஅடிப்படை வசதிக்கு நா.த.க., மனு

தர்மபுரி:நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், அடிப்படை தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி முறையாக இல்லை. 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், மிகுந்த

இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.இதனால், நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களால் தான் தமிழகம் முன்னேறுகிறது என, பெருமை பேசும் திராவிட ஆட்சியில், அடிப்படை தேவையான கழிப்பறை, துாய குடிநீர் வசதி கூட ஏற்படுத்தவில்லை. இது வெட்கக்கேடானது. வசதி செய்து தரவில்லை எனில், நா.த.க., சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என கூறியிருந்தார்.

நேற்று, நா.த.க., தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் நேதாஜி தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரசு கல்லுாரி முதல்வரிடம் மனு அளிக்க சென்றனர். கட்சியினர் திரளாக சென்றதால், கல்லுாரி வளாகத்தினுள் அனுமதிக்கவில்லை. பின்னர், அங்கு வந்த கல்லுாரி முதல்வர் கண்ணன், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறினார். இதையடுத்து, நா.த.க.,வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us