ADDED : பிப் 18, 2025 12:41 AM
திருட்டு வழக்கில் இருவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார், 36. தனியார் நிறுவன இன்ஜினீயர். கடந்த, 15ல் இரவு குடும்பத்துடன் வீட்டின் மேல் மாடியில் கதவை திறந்து வைத்து விட்டு துாங்கினார். அப்போது, மர்ம நபர் வீட்டில் நுழைந்து பீரோவை உடைத்து, அதிலிருந்த தங்கச் செயின், மோதிரம், தோடு என, 2 பவுனை திருடி கொண்டு தப்பினர். போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் என தெரிந்து, அவரை பொம்மிடி போலீசார் கைது செய்து, 2 பவுனை மீட்டனர்.
இதே போன்று, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன், 63, விவசாயி. இவரது விவசாய தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வைத்திருந்த சொட்டு நீர் பாசன குழாயை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். புகார் படி, அ.பள்ளிப்பட்டி போலீசார், கொக்கரப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், 37, என்பவரை கைது செய்தனர்.

