/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பைனான்ஸ் நிறுவனத்தில்பணம் திருடியவர் கைது
/
பைனான்ஸ் நிறுவனத்தில்பணம் திருடியவர் கைது
ADDED : மார் 03, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைனான்ஸ் நிறுவனத்தில்பணம் திருடியவர் கைது
அரூர்: அரூர், பழையபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன், 32. இவர், அரூர், திரு.வி.க., நகரில், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்தாண்டு, நவ., 28ல், 75,000 ரூபாயை மேசை டிராயரில் வைத்துள்ளார். கடந்த, 27ல் காலை, 10:00 மணிக்கு மேசை டிராயரை திறந்து பார்த்தபோது காணவில்லை. புகார் படி, அரூர் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் பணத்தை திருடியதாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜ், 28, என்ற வாலிபரை கைது செய்தனர்.