ADDED : மார் 09, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழிப்புணர்வு நடை பயணம்
தர்மபுரி:தேசிய மகளிர் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில், மகளிர் உதவி எண், 181 மற்றும் காவல் உதவி ஆப், பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் நடை பயணத்தை கலெக்டர் சதீஸ் நேற்று துவக்கி வைத்தார். இதில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், நடந்த விழிப்புணர்வு நடை பயணத்தில், கல்லுாரி மாணவியர் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், ஆர்.டி.ஓ., காயத்ரி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.