ADDED : ஏப் 01, 2025 01:37 AM
அ நிறம் | அளவு
நாய்கள் கடித்து குதறி மான் பலி
பாலக்கோடு:பாலக்கோடு அருகே, மொரப்பூர் காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, யானை போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். நேற்று அதிகாலை மொரப்பூர் காப்புக்காட்டில் இருந்து, 2 வயதுடைய ஆண் மான் ஒன்று, காடுசெட்டிபட்டியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் தேடி வந்தது. இதை கண்ட தெருநாய்கள் மானை துரத்தி கடித்து குதறின-. இதில், பலத்த காயமடைந்த மான் இறந்தது. பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜ், வன மருத்துவர் மற்றும் வன காவலர்கள் சம்பவ இடம் சென்று, இறந்த மானை பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்தனர்.
