sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நிலுவை அகவிலைப்படி கேட்டு ஆர்ப்பாட்டம்

/

நிலுவை அகவிலைப்படி கேட்டு ஆர்ப்பாட்டம்

நிலுவை அகவிலைப்படி கேட்டு ஆர்ப்பாட்டம்

நிலுவை அகவிலைப்படி கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 21, 2024 09:29 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 09:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, : நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், நேற்று தர்-மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயன், பொருளாளர் சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு போக்-குவரத்து கழக ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநில துணைச் செயலாளர் குப்புசாமி வாழ்த்தி பேசினார். இதில், மின்வாரிய ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கடந்த ஜன., 1 முதல் மே, 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 4 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி, காப்பீடு நிறுவ-னத்திடம் பணப்பயன்களை முழுமையாக வழங்க வேண்டும். விதவை, விவாகாரத்தானவர்களுக்கு நிறுத்தி வைத்துள்ள குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வின் அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களுக்கு, பண பயன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us