/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பசுமைப்படை மூலம் மரக்கன்றுகள் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
/
பசுமைப்படை மூலம் மரக்கன்றுகள் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
பசுமைப்படை மூலம் மரக்கன்றுகள் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
பசுமைப்படை மூலம் மரக்கன்றுகள் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூலை 03, 2024 08:01 AM
தர்மபுரி, : நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பசுமை படை மாணவர்கள், பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்-றுகள் நட்டு பாராமரித்து வருகின்றனர். இதனால் இப்பள்ளி பசுமை பள்ளியாக தேர்வு செய்யபட்டுள்ளது.
இது குறித்து, தலைமை ஆசிரியர் தங்கவேல் கூறியதாவது:
இப்பள்ளியில், 1,120 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசி-ரியர் சின்னசாமி தலைமையிலான பசுமைபடையில், 70 மாண-வர்கள் உள்ளனர். இங்கு தொடங்கப்பட்டுள்ள நர்சரியில், 20 வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பள்ளிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்கு இங்கிருந்து மரக்கன்றுகள் வழங்கு-கிறோம். கடந்த, 2023ல் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்து, அதற்காக ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்-கப்பட்டது. தொடர்ந்து அண்ணா தலைமைத்துவ விருது, சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருதை அமைச்சர் மகேஷ் வழங்-கினார். மேலும், 10 லட்சம் ரூபாய்கான காசோலை வழங்கப்பட்-டது. இந்தாண்டு பசுமை பள்ளியாக தேர்வு செய்து, விருது வழங்கி, 20 லட்சம் ரூபாய் பசுமை பணிக்காக வழங்கப்பட்டுள்-ளது.
இப்பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு முதல்வர் திறனறி தேர்வு, தமிழ் இலக்கிய தேர்வு மற்றும் என்.எம்.எஸ்., தேர்வில், தலா இருவர், ஊரக திறனாய்வு தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வில், 2020ல் இருவர், 2021ல் ஒருவர், 2023ல் இருவர், நடப்பாண்டில், 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.